உலகம்

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.. ஆதரவாக வாக்களித்த இந்தியா : 153 நாடுகள் ஆதரவு !

காசாவில் போர் நிறுத்தம் தேவை என்ற தீர்மானம் ஐ.நாவில் சபையில் கொண்டுவரப்பட்ட நிலையில் 153 நாடுகள் ஆதரவோடு அது நிறைவேறியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.. ஆதரவாக வாக்களித்த இந்தியா : 153 நாடுகள் ஆதரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.. ஆதரவாக வாக்களித்த இந்தியா : 153 நாடுகள் ஆதரவு !

இந்த நிலையில் காசாவில் போர் நிறுத்தம் தேவை என்ற தீர்மானம் ஐ.நாவில் சபையில் கொண்டுவரப்பட்ட நிலையில் 153 நாடுகள் ஆதரவோடு அது நிறைவேறியுள்ளது. ஐ.நா பொதுச்சபையில் எகிப்து நாட்டால் காசாவில் போர் நிறுத்தம் தேவை என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதனால் இந்த தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அதே போல இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்த நிலையில், அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன.

banner

Related Stories

Related Stories