உலகம்

எலிசபெத் ராணியின் மறைவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த இளவரசர்.. கணவருடன் ராணியின் உடல் அடக்கம் ?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து அவரது உடல் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மறைந்த அவரது கணவர் பிலிப்பின் உடலுடன் அடக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலிசபெத் ராணியின் மறைவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த இளவரசர்.. கணவருடன் ராணியின் உடல் அடக்கம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.

உலகிலேயே நீண்ட ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்த 2வது ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார். 953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு இவர் ராணியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எலிசபெத் ராணியின் மறைவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த இளவரசர்.. கணவருடன் ராணியின் உடல் அடக்கம் ?

இவரின் 70 ஆண்டுகால ஆட்சியில் 14 பிரிட்டன் பிரதமர்கள் பதவிவகித்துள்ளனர். 16 நாடுகளின் ராணியாகவும் இவர் இருந்துள்ளார். இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ராணி எலிசபெத் பயணம் செய்துள்ளார். இவர் கால்படாத நாடே இருக்காது. இவரின் மறைவை அடுத்து பிரிட்டன் நாட்டின் மன்னராக இளவரசர் சார்லஸ் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், ராணியின் உடல் அடக்கம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ராணியின் கணவர் பிலிப், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.அப்போது தனது மரணத்துக்குப் பிறகு, ராணி - மன்னரின் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் ராணியின் விருப்பமாக இருந்துள்ளது. அதனால் இளவரசர் பிலிப்பின் உடல், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர், தி ராயல் வால்ட்டில் உள்ள சாப்பலில் வைக்கப்பட்டது.

எலிசபெத் ராணியின் மறைவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த இளவரசர்.. கணவருடன் ராணியின் உடல் அடக்கம் ?

தற்போது ராணியின் மரணத்தை தொடர்ந்து விண்ட்ஸர் கோட்டையின் கிங் ஜார்ஜ் ஆறாவது மெமோரியல் சேப்பலில் ராணி எலிசபெத் - இளவரசர் பிலிப் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. இதற்காக, ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இருக்கும் ராயல் வால்ட்டில் இருந்து, மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது.

ராணியின் உடலுக்கு அரசுமரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பிறகு, விண்ட்ஸர் காஸ்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஜின் சாப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது கணவர் பிலிப்பின் உடலுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories