தமிழ்நாடு

காப்பீடு பணத்திற்காக தாயை கொன்ற மகன் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் காப்பீடு பணத்திற்காகப் பெற்ற தாயை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காப்பீடு பணத்திற்காக தாயை கொன்ற மகன் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் படேக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்சு. இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டிற்காக நண்பர்களிடம் 4 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால் அனைத்து பணத்தையும் இழந்துள்ளார்.

இதையடுத்து கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத இருந்த ஹிமான்சுக்கு மோசமான யோசனை தோன்றியது. சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் நகை திருடி அதில் கிடைத்த பணத்தைத் தனது பெற்றோருக்கு ரூ.50 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு வாங்கியுள்ளார் ஹிமான்சு.

இந்த பணத்தைப் பெறுவதற்காகப் பெற்ற தாயைக் கொலை செய்து யமுனை ஆற்றின் கரையில் உடலை வீசியுள்ளார். இந்த கொடூர சம்பவம் வெளியே வந்ததை அடுத்து ஹிமான்சுவை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories