தமிழ்நாடு

“கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!

ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரித்திருக்கிறார்.

“கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் விலை குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பால் விலையைக் குறைத்து தமிழக மக்களின் வயிற்றில் முதலமைச்சர் பால்வார்த்திருக்கிறார். அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் ஆவின் பால் விற்பனையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் சேவையே எங்களுக்கு முக்கியம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories