விளையாட்டு

"230 ரன் இலக்கை Defend செய்ய முடியும் என்பது தெரியும்" - INDvsENG போட்டி குறித்து குல்தீப் கூறியது என்ன ?

இந்த ஆடுகளத்தில் 230 ரன்கள் என்ற இலக்கை டிஃபென்ட் செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என இந்திய வீரர் குல்தீப் கூறியுள்ளார்.

"230 ரன் இலக்கை Defend செய்ய முடியும் என்பது தெரியும்" - INDvsENG போட்டி குறித்து குல்தீப் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், போட்டியை நடத்தும் இந்திய அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கோலி ரன் கணக்கை தொடங்காமல் டக் அவுட்டானார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி, 40 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் - ராகுல் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

"230 ரன் இலக்கை Defend செய்ய முடியும் என்பது தெரியும்" - INDvsENG போட்டி குறித்து குல்தீப் கூறியது என்ன ?

ராகுல் 39 ரன்களுக்கும், ரோஹித் 87 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதிக்கட்டத்தில் சூரியகுமார் 49 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன் குவித்தது.பின்னர் 230 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கினாலும், பும்ரா பந்துவீச்சில் மலான், ரூட் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மேலும், முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

"230 ரன் இலக்கை Defend செய்ய முடியும் என்பது தெரியும்" - INDvsENG போட்டி குறித்து குல்தீப் கூறியது என்ன ?

இந்த போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப், "சொந்த ஊரில் விளையாடுவது எப்போதுமே சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்த ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. இங்கு பனிப்பொழிவு இருந்ததால், பந்தை சரியான லெந்தில் வீச முயற்சித்தோம். இந்த ஆடுகளத்தில் 230 ரன்கள் என்ற இலக்கை டிஃபென்ட் செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.

பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த விரும்பினோம். அதை பும்ரா மற்றும் ஷமி செய்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். நாங்கள் ரெகுலர் பேட்ஸ்மேன்கள் கிடையாது. ஆனாலும் இறுதி கட்டத்தில் 15-20 ரன்கள் எடுக்கலாம் என்பதற்காக பேட்டிங் பயிற்சியும் மேற்கொள்கிறோம். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓரளவுக்கு எங்களால் பங்களிப்பு தர முடிந்தது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories