விளையாட்டு

"விராட் கோலியோடு ஒப்பீடா ? அவர் ஹீரோ இல்லை ஜீரோதான்" -சக நாட்டு வீரரையே விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !

பாபர் அசாமை விராட் கோலியோடு எல்லாம் ஒப்பிடவேண்டாம் என்றும், அவர் ஒரு ஜீரோ என்றும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

"விராட் கோலியோடு ஒப்பீடா ? அவர் ஹீரோ இல்லை ஜீரோதான்" -சக நாட்டு வீரரையே விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். அதன்பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக ரன் குவிக்க இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது.

"விராட் கோலியோடு ஒப்பீடா ? அவர் ஹீரோ இல்லை ஜீரோதான்" -சக நாட்டு வீரரையே விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 35.5 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து அதிரடியாக டிக்ளர் செய்தது.343 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்னர் கராட்சியின் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் குவிக்க, பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

"விராட் கோலியோடு ஒப்பீடா ? அவர் ஹீரோ இல்லை ஜீரோதான்" -சக நாட்டு வீரரையே விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !

பின்னர் 170 ரன்களை இலக்காக வைத்து ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்றார் கணக்கில் வென்று பாகிஸ்தான் அணியின் சொந்த மண்ணிலேயே அந்த அணியை white wash செய்துள்ளது. இத்தகைய மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை விராட் கோலியோடு எல்லாம் ஒப்பிடவேண்டாம் என்றும், பாபர் அசாம் ஒரு ஜீரோ என்றும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "முதலில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகப்பெரும் வீரர்கள். அதுபோன்ற எவரும் பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதுதான் உண்மை. பாபர் அசாம் ராஜாவைப் போல பேசுவார். ஆனால், பாபர் ஆசம் மிகப்பெரிய ஜீரோ. கேப்டனாக செயல்படும் தகுதி அவருக்கு கிடையாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories