அரசியல்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : ஊழியர்களுக்கு தாமரை பொறித்த புதிய சீருடைகளால் சர்ச்சை !

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், அங்கிருக்கும் காவலர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 'தாமரை மலர்' பொறித்த புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை !

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : ஊழியர்களுக்கு தாமரை பொறித்த புதிய சீருடைகளால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தற்போது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, துன்பப்படுத்தி வரும் ஆளுங்கட்சியாக பாஜவை ஓரங்கட்ட, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. அந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு 'இந்தியா' என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 4-வது கூட்டத்தொடர் அடுத்து நடைபெறவுள்ள நிலையில், பாஜக பெரும் பீதியில் உள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்ற 6 மாநிலங்களின் 7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 4 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இந்தியா கூட்டணி காரணமாக நாட்டின் பெயரை பாஜக மாற்ற துடிக்கிறது.

இந்த சூழலில் நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டு வரப்போவதாக பாஜக தலைமைகள் பேசி வருகிறது. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தல் தேதி சீக்கிரம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : ஊழியர்களுக்கு தாமரை பொறித்த புதிய சீருடைகளால் சர்ச்சை !

இந்த மாதிரியான சூழ்நிலையில், தற்போது நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் நடைபெறவுள்ளது. அடுத்த வாரம், செப்டெம்பர் 18-ம் தொடங்கவுள்ள இந்த கூட்டமானது, செப்டெம்பர் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பல முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்டும் நிலையில், இந்த கூட்டம் எந் கட்டடத்தில் நடைபெறவுள்ளது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அந்த வகையில் முதல்நாள் கூட்டம் பழைய கட்டடத்திலும், மீதம் இருக்கும் கூட்டம் புதிய நாடாளுமன்ற கட்டடத்திலும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகார்பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தின் காவலர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 'தாமரை மலர்' பொறித்த புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : ஊழியர்களுக்கு தாமரை பொறித்த புதிய சீருடைகளால் சர்ச்சை !

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் அடுத்த வாரம் கூட உள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நாடாளுமன்ற காவலர்களுக்கும், அலுவலர்களுக்கும் புதிய சீருடைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதனால் சலசலப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்கள் உடுக்கும் தற்போதைய சபாரி உடைகளுக்குப் பதிலாக ஆண் பணியாளர்களுக்கு குர்தா, பைஜாமாவும், பெண் பணியாளர்களுக்கு புடவையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனை தேசிய ஆடைவடிவமைப்பு கல்வி நிறுனமான நிப்ட் வடிவமைத்துள்ளது. புதிய சீருடைகளில் தாமரை மலர் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றம் கூடும் போது இந்த சீருடை பிரச்னை சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories