இந்தியா

தையல் பள்ளி பேரில் பாலியல் தொழில்; 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கயவர்கள்: 6 பேர் சிக்கியது எப்படி?

மயக்கமடைந்து தெளிந்தபோது ஒரு அறையின் படுக்கையில் இருந்த சிறுமியின் மேல் ரத்தக்கறை இருந்ததிருக்கிறது. அச்சமயம் ராஜேஸ்வரி வந்து நடந்தது பற்றி யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

தையல் பள்ளி பேரில் பாலியல் தொழில்; 16 வயது சிறுமியை  வன்கொடுமை செய்த கயவர்கள்: 6 பேர் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் கொடுமை செய்த புகாரின் 2 பெண்கள் உட்பட ஆறு பேரை பெங்களூரு போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர். லேஅவுட் போலிஸாரிடம் தன் மகளுக்கு நேர்ந்தது தொடர்பாக புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் போலிஸார் கடந்த மார்ச் 8ம் தேதி கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

போலிஸாரின் கூற்றுப்படி, பெங்களூரின் அகாராவைச் சேர்ந்த கலாவதி (52), பந்தேபல்யாவைச் சேர்ந்த ராஜேஸ்வரி (50) ஆகிய இருவரும் பந்தேபல்யாவில் தையல் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்கள்.

<div class="paragraphs"><p>கேஷவமூர்த்தி</p></div>

கேஷவமூர்த்தி

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். பள்ளி நேரம் முடிந்த பிறகு ராஜேஸ்வரி, கலாவதியின் தையல் பள்ளிக்குச் சென்று பயிற்சி பெறுவதை அச்சிறுமி வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

அப்போது, “கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற ராஜேஸ்வரி, உனது அம்மா உனக்காக அங்கு காத்திருக்கிறார் எனக் கூறி தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமிக்கு ஜூஸ் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு மயக்கமடைந்து தெளிந்தபோது ஒரு அறையின் படுக்கையில் இருந்த சிறுமியின் மேல் ரத்தக்கறை இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்.

அச்சமயம் ராஜேஸ்வரி வந்து நடந்தது பற்றி யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். பின்னர் கலாவதி இருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு வேறொருவரால் வன்கொடுமைக்கு சிறுமி ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை இப்படியாக கலாவதியும், ராஜேஸ்வரியும் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு அழைத்து கொடுமைப்படுத்தினார்கள்” என பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததாக போலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 6ம் தேதி ராஜேஸ்வரி தன்னை மீண்டும் அழைத்து அவரது வீட்டுக்கு வரும்படி சிறுமியை வற்புறுத்தியிருக்கிறார். அன்றைய தினம் வீட்டில் இருந்த சிறுமியின் தாயார் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அறிந்ததோடு அவரது உடைகளில் ரத்தக்கறை இருந்ததை கவனித்திருக்கிறார்.

இதனையடுத்து நடந்த சம்பவங்கள் பற்றி தனது அம்மாவிடம் சிறுமி தெரிவித்திருக்கிறார். உடனடியாக போலிஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பேரில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனையறிந்த ராஜேஸ்வரியும், கலாவதியும் தப்பிக்க முயற்சித்த போது மார்ச் 7ம் தேதி மாலை போலிஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அப்போது சிறுமியை வன்கொடுமை செய்த நபர்கள் குறித்து விசாரித்ததின் பேரில் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ள கேஷவமூர்த்தி (47), கோரமங்கலாவைச் சேர்ந்த சத்யராஜு (43), யெலஹங்காவைச் சேர்ந்த சரத் (38) மற்றும் பேகூரைச் சேர்ந்த ரஃபீக் (38) ஆகிய நால்வர் என தெரிய வந்தது.

பின்னர் அந்த நால்வரையும் கைது செய்த போலிஸார், 2 பெண்கள் உட்பட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதில், ராஜேஸ்வரியும், கலாவதியும் தையல் பயிற்சி பள்ளி பேரில் பாலியல் தொழில் நடத்த்தியதாவும், பாதிக்கப்பட்ட சிறுமியை மேற்குறிப்பிட்ட கயவர்களுக்கு இரையாக்கி பணம் சம்பாதித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories