இந்தியா

“மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு” - கொலை என குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் மார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு” - கொலை என குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்க மாநிலம் ஹெமதாபாத் தொகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் வீட்டின் அருகில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் தேபேந்திர நாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தின் போது எம்.எல்.ஏ உயிரிழந்த விவகாரம் அப்பகுதி மக்களுக்குத் தெரியவர உடலைப் பார்க்க மக்கள் வீதியில் குவிந்தனர்.

இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்து தனது கணவரை அழைத்துச் சென்றதாக தேபேந்திர நாத்தின் மனைவி போலிஸாரிடம் கூறியுள்ளார்.

மேலும் தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை; அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அம்மாநில பா.ஜ.கவினர் குற்றம் சாட்டியுள்ளனர். எம்.எல்.ஏ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories