இந்தியா

“15 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே உணவு நிவாரணம் கிடைத்துள்ளது”: மோடியின் வெற்று அறிவிப்பு அம்பலம்!

கொரோனா நிவாரண நலத்திட்டங்களின் படி உணவு தானிய நிவாரணப்பொருளில் 15 சதவீத ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமே உணவு நிவாரணம் சென்றடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“15 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே உணவு நிவாரணம் கிடைத்துள்ளது”:  மோடியின் வெற்று அறிவிப்பு அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களை சந்திக்கின்றனர். இந்த பொரும் துயரங்களுக்கு அரசின் நிவாரணமும் முழுமையாக சென்றடையாதேக் காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், அது உண்மை என நிரூபிக்கும் வகையில், மத்திய அரசின் கொரோனா வைரஸ் நிவாரண நலத்திட்டங்களின் படி உணவு தானிய நிவாரணப்பொருளில் பருப்பு தலா 1 கிலோ வீதம் 15 சதவீதக் ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறையே தெரிவித்துள்ளது.

“15 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே உணவு நிவாரணம் கிடைத்துள்ளது”:  மோடியின் வெற்று அறிவிப்பு அம்பலம்!

ஏறக்குறைய இன்னும் ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒருவாரக் காலமே இருக்கும் நிலையில், பிரதமர் கரீப் கல்யாண் யோஜனாவின் திட்டம் படி ஏப்ரல் மாத்திற்கு 19 கோடி குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டிய 1.96 லட்சம் டன்கள் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களில் வெறும் 30,000 டன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது 15% ஏழைக்குடும்பங்களுக்கு மட்டுமே அரசின் ஒரு கிலோ பருப்புச் சென்றுள்ளது. இந்த தகவலை நுகர்வோர் விவகாரத் துறையே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “விநியோக நடைமுறை அளவில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

பெரும்பாலும் லாரிகள் மூலம் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. 4 வாரங்களில் 2 லட்சம் லாரி டிரிப்கள் தேவைப்படும் அதுவும் லாக் டவுன் காலத்தில் மில்கள் பலவும் ஹாட்ஸ்பாட்களில் உள்ளதால் பெரும் சிரமங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பே இதற்கான திட்டத்தை வகுத்து இருக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் திட்டத்தை மட்டும் அறிவித்துவிட்டு மக்களுக்கு அதை செயல்படுத்தாமல் இருப்பது பெரும் அலட்சியமாகும். இது மோடியில் வெற்று அரவிப்பை அம்பலப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories