உலகம்

தொடர்ந்து நஷ்டம்.. ட்விட்டர், மெட்டா வரிசையில் தற்போது அமேசான்.. 10,000 பேருக்கு பறிபோகும் வேலை!

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்திலும் 10,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நஷ்டம்.. ட்விட்டர், மெட்டா வரிசையில் தற்போது அமேசான்.. 10,000 பேருக்கு பறிபோகும் வேலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் நிதிநெருக்கடி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

தொடர்ந்து நஷ்டம்.. ட்விட்டர், மெட்டா வரிசையில் தற்போது அமேசான்.. 10,000 பேருக்கு பறிபோகும் வேலை!

ட்விட்டர் நிறுவனத்தின உரிமையாளரான கையோடு அதில் பணியாற்றிய 90% ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார் எலான் மஸ்க். அதேபோல் பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக மெட்டாவில் இருந்து 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி உலகின் பிரபலமான முன்னணி நிறுவனங்களே தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வரும் சம்பவம் ஐ.டி உள்ளிட்ட துறைகளில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நஷ்டம்.. ட்விட்டர், மெட்டா வரிசையில் தற்போது அமேசான்.. 10,000 பேருக்கு பறிபோகும் வேலை!

இந்நிலையில் ட்விட்டர், மெட்டா நிறுவனத்தைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமாக இருக்கும் அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லாபம் இல்லாததால் செலவுகளைக் குறைக்கவே இந்த நடவடிக்கையை அமேசான் நிறுவனம் எடுக்க உள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.

அதேபோல் அமேசான் நிறுவனத்தின் alexa braava jet, வீட்டு பாதுகாப்பு கேமராக்கள், சில்லறை வணிகம், மனித வள பிரிவுகளில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. உலகின் பிரபலமான முன்னணி நிறுவனங்களே தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வரும் சம்பவம் ஐ.டி உள்ளிட்ட துறைகளில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories