உலகம்

உக்ரைன் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி மீது குண்டு வீச்சு.. தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா? : நடப்பது என்ன ?

உக்ரைனில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி மீது குண்டு வீச்சு.. தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா? : நடப்பது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான இராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ள நிலையில், உக்ரைன், ரஷ்யா எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த உக்ரைன், 1991-ஆம் ஆண்டு தனி நாடாக சுதந்திரம் பெற்றது. தற்போது தனி நாடாக இருந்தாலும் வர்த்தகம், பொருளாதாரம் போன்றவற்றுக்கு ரஷ்யாவையே உக்ரைன் அதிகம் சார்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ளப் பேச்சு நடத்தினாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல் ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சிப் பின்வாங்கியது உக்ரைன்.

ஆனால் ரஷ்யாவின் மேலாதிக்கத்தை நிராகரித்தும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தும் உக்ரைனிய மக்கள் 2005 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரண்டு புரட்சிகளை நடத்தினர்.

உக்ரைன் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி மீது குண்டு வீச்சு.. தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா? : நடப்பது என்ன ?
CARLOS BARRIA

உக்ரைன் நேட்டோவில் இணைய முயல்வது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கூறும் ரஷ்ய அதிபர் புதின், போர் மூலம் அந்நாட்டை தன் வசப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டு வருகிறார்.

உக்ரைன் விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே போர் வெடிக்குமா அல்லது சுமூகத் தீர்வு எட்டப்படுமா என்பதுதான் உலக நாடுகள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கும் நிலையில் உக்ரைன் பகுதியில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள டான்பஸ் மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் மழலையர் பள்ளியின் கட்டம் இடிந்துமுழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த குண்டு வீச்சு தாக்குதலை யார் நடத்தினர் என்பது இன்னும் தெரியவில்லை.

மேலும் குண்டு வீச்சு நடைபெற்ற பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது உக்ரைன் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories