தமிழ்நாடு

10000 தொழில் முனைவோர்களுக்கு வணிக பயிற்சிகள்: அசத்தலான 43 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையில் 43 புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார்.

10000 தொழில் முனைவோர்களுக்கு வணிக பயிற்சிகள்: அசத்தலான 43 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 43 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

10000 தொழில் முனைவோர்களுக்கு வணிக பயிற்சிகள்: அசத்தலான 43 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்

கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுந்தொழில் முனைவோர்கள் தேவையைப் பூர்த்தி செய்து வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய வகையில் ரூ.48.88 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்.

புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விருதுநகர், செங்கல்பட்டு, திருநெல்வேலியில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பட்டைகள் ரூ.108.2 கோடியில் அமைக்கப்படுவதால் 6200 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி ரூ.30 கோடியிலிருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடியில் மாநில அரசு பங்களிப்புடன் ரூ.3 கோடியில் ஒரு விசைத்தறி குழுமம் அமைக்கப்படும்.

கோயம்புத்தூரில் மாநில அரசு மானியத்துடன் ரூ.7.33 கோடியில் பாக்கு மட்டைபொருட்கள் குழுமம் அமைக்கப்படும்.

ரூ.1 கோடியில் வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் தேன் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டம் கரசமங்கலத்தில் மண்பாண்ட குழுமம் ரூ.3.39 கோடியில் அமைக்கப்படும்.

மதுரை மாவட்டம், செக்கநூரணியில் மரவேலைப்பாடு செய்யும் மகளிர் குறுங்குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.4.20 கோடியில் ஏற்படுத்தப்படும்.

தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய பரிசோதனைக்கூடம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

10000 தொழில் முனைவோர்களுக்கு வணிக பயிற்சிகள்: அசத்தலான 43 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்
10000 தொழில் முனைவோர்களுக்கு வணிக பயிற்சிகள்: அசத்தலான 43 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் கண்காட்சிகள் உருவாக்கப்படும்.

தென்னை நார் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்.

ரூ.16 லட்சத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 1 லட்சம் தென்னை நார் வளர்ப்பு பைகள் பயன்படுத்தப்படும்.

10,000 தொழில் முனைவோர்களுக்கு ரூ.50 லட்சத்தில் வணிகப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

ரூ.175 கோடியில் தொழில் முனைவோருக்கு உடன் பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் கிண்டியில் உருவாக்கப்படும். இதன் மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க திட்ட உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தப்படும்.

banner

Related Stories

Related Stories