தமிழ்நாடு

ஆண் நண்பர்களுடன் பேசியதைக் கண்டித்த தாய்.. 17 வயது மகள் செய்த கொடூரச் செயல் : உறவினர்கள் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பர்களுடன் பேசியதைக் கண்டித்த தாய்.. 17 வயது மகள் செய்த கொடூரச் செயல் : உறவினர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முனியலட்சுமி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது 17 வயது மகள் தங்கள் பகுதியில் வசிக்கும் ஆண் நண்பர்கள் சிலருடன் பேசி பழகி வந்துள்ளார். இதற்கு முனிய லட்சுமி எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கண்டித்துள்ளார்.

இருப்பினும் அவரது மகள் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து இன்று முனிய லட்சுமியின் மகள் தனது தாயை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விட்டதாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த போலிஸார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து அரவது மகளிடம் போலிஸார் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரனாகப் பதிலளித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் தீவிரமாக விசாரணை செய்தனர்.

அப்போது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காலையில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த 2 ஆண் நண்பர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories