தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை மகனுடன் இணைந்து அடக்கம் செய்யும் தி.மு.க நிர்வாகி!

கொரோனாவால் இறந்தோரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில் 62 பேரின் உடல்களை தி.மு.க நிர்வாகியும் அவரது மகனும் இணைந்து அடக்கம் செய்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை மகனுடன் இணைந்து அடக்கம் செய்யும் தி.மு.க நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தீவிர பரவலால், உயிரிழப்புகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

உயிரிழப்போரின் உறவினர்கள் தொற்று அச்சம் காரணமாக இறுதிச் சடங்குகள் செய்யத் தயக்கம் காட்டும் சூழல் நிலவுகிறது.

சிவகங்கையில் கொரோனாவால் இறந்தோரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில் 62 பேரின் உடல்களை தி.மு.க நிர்வாகியான அயூப்கான் மற்றும் அவரது மகன் இணைந்து அடக்கம் செய்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தினசரி 20க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். சிலர் சொந்த ஊர்களுக்குக் கொண்டுச் சென்று உடல்களை அடக்கம் செய்கின்றனர்.

பல இடங்களில் கொரோனா அச்சம் காரணமாக இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் முன்வருவதில்லை. இதையறிந்து தன்னார்வலரும், சிவகங்கை நகர தி.மு.க இளைஞரணி செயலாளருமான அயூப்கான் (45), அவரது மகன் ராஜா (19) ஆகியோர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் இறந்தோரின் மத முறைப்படி இரவு, பகல் பாராமல் இறுதிச் சடங்குகளைச் செய்து அடக்கம் செய்கின்றனர். தந்தையும் மகனும் இணைந்து கடந்த 2 மாதங்களில் 62 பேரின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

பேரிடர் காலத்தில், பெரும் மனிதநேயத்தோடு தொடர்ந்து இச்சேவையில் ஈடுபட்டு வரும் அயூப்கான் மற்றும் ராஜாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்துக் கூறியுள்ள சிவகங்கை நகர தி.மு.க இளைஞரணி செயலாளர் அயூப்கான், “இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு நேரம், காலம் பார்ப்பதில்லை. எப்போது அழைத்தாலும் செல்கிறோம்.

மத பேதம் பார்ப்பதில்லை. இறந்தவர்களை அடக்கம் செய்வதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பார்த்து எனது மகனும் இச்சேவையில் ஈடுபட்டு வருகிறான். எங்களுக்கு இளைஞர்கள் சிலரும் உதவி செய்கின்றனர்

கொரோனா முதல் அலையின்போது 16 பேரின் உடல்களை அடக்கம் செய்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டி விருது வழங்கினார். தற்போது இரண்டாம் அலையிலும் தொடர்ந்து இச்சேவையை செய்து வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories