தமிழ்நாடு

“அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினருக்கு முதல் மரியாதை கூடாது” - ஐகோர்ட் கிளை முக்கிய நிபந்தனை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

“அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினருக்கு முதல் மரியாதை கூடாது” - ஐகோர்ட் கிளை முக்கிய நிபந்தனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜல்லிக்கட்டு வரவு செலவுகளை புதிய வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலமே நிர்வாகம் செய்யவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10க்கும் மேற்ட்ட ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை  ஏ.கே.கண்ணன் தலைமையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "கடந்த ஆண்டு போல முதல் மரியாதை வழங்குவது மற்றும் ஜாதி ரீதியாக, அரசியல் ரீதியாக ஃப்ளக்ஸ் பேனர்களை வைப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்காக தனி வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும்." எனக் கோரினார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொருந்தும் என்றும் அதில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள மூன்று விதிகளை விழா கமிட்டி பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதேபோல பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு, கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்ததால் மனுவை ஏற்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

banner

Related Stories

Related Stories