தமிழ்நாடு

“ஆன்லைன் கல்வியால் தொடரும் உயிர்பலி” : ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தற்கொலை!

தூத்துக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆன்லைன் கல்வியால் தொடரும் உயிர்பலி” : ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொலைக்காட்சி வழியாகவும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டுகிறது. இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது. இதனால் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத சூழலே நிலவு உள்ளது.

“ஆன்லைன் கல்வியால் தொடரும் உயிர்பலி” : ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தற்கொலை!

இதனால் செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஆன்லைன் வகுப்பால் தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஆன்லைன் படிப்பிற்கு செல்போன் இல்லாத விரத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி. விவசாய கூலித் தொழிலாளி செய்து வரும் சுடலைமணியின் மகன் முருகப்பெ்ருமாள் அருகில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

“ஆன்லைன் கல்வியால் தொடரும் உயிர்பலி” : ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தற்கொலை!

இதனால் செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஆன்லைன் வகுப்பால் தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஆன்லைன் படிப்பிற்கு செல்போன் இல்லாத விரத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி. விவசாய கூலித் தொழிலாளி செய்து வரும் சுடலைமணியின் மகன் முருகப்பெ்ருமாள் அருகில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories