தமிழ்நாடு

சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று காற்றுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய உள்ளதால் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வராமல் இருப்பது காண முடிகிறது.

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மணிக்கு 30-40கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 30-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இயல்பை விட 5-6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories