விளையாட்டு

"இந்திய அணியில் இந்த தமிழ்நாடு வீரர் இல்லை என்பது பெரும் ஏமாற்றம் " -முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து !

தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இந்திய தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தைக் கொடுத்ததாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

"இந்திய அணியில் இந்த தமிழ்நாடு வீரர் இல்லை என்பது பெரும் ஏமாற்றம் " -முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.

இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

"இந்திய அணியில் இந்த தமிழ்நாடு வீரர் இல்லை என்பது பெரும் ஏமாற்றம் " -முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து !

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட இந்திய அணி அனுப்பப்படும் என கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பல இளம்வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இந்திய தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தைக் கொடுத்ததாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், " இந்த அணி சிறப்பாக தெரிந்தாலும், அணியில் வருண் சக்கரவர்த்தி என்ற பெரிய பெயர் இல்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவரை ஆட வைத்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்கள் நீக்கி விட்டீர்கள். அதன்பின் அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாகவே பந்துவீசினார். அதன் காரணமாக இந்த தொடரில் அவர் இடம்பெறுவர் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. ஏற்கனவே தேர்வான வீரர்கள் மீண்டும் வாய்ப்பு பெறும் கோணத்தில் பார்க்கும் போது வருண் சக்கரவர்த்தி இந்த அணியில் இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories