விளையாட்டு

இந்தாண்டு IPL தொடரோடு ஓய்வா ? -ரசிகர்களின் ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.தோனி !

இந்தாண்டு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவதாக வெளியான தகவலுக்கு எம்.எஸ்.தோனி முடிவுரை எழுதியுள்ளார்.

இந்தாண்டு IPL தொடரோடு ஓய்வா ? -ரசிகர்களின் ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த  எம்.எஸ்.தோனி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்தாண்டு IPL தொடரோடு ஓய்வா ? -ரசிகர்களின் ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த  எம்.எஸ்.தோனி !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தாண்டு IPL தொடரோடு ஓய்வா ? -ரசிகர்களின் ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த  எம்.எஸ்.தோனி !

இந்த நிலையில், சென்னை அணி இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி பாதியில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின் போது அங்கிருந்த தொகுப்பாளர் டேனி மோரிசன், தோனியை நோக்கி "இது உங்கள் கடைசி ஐபிஎல் போட்டி என கூறப்படும் நிலையில், ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி, 'இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நான் முடிவு செய்யவில்லை' என்று சிரித்துக்கொண்டே கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தாண்டு IPL தொடரோடு ஓய்வா ? -ரசிகர்களின் ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த  எம்.எஸ்.தோனி !

இதனையடுத்து ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், தோனி மீண்டும் வருவார் என்றும், அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார்' என்றும் கூறினார். இதன் காரணமாக தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறமாட்டார் என்றும், அடுத்த சீசனிலும் தொடர்ந்து ஆடுவார் என ரசிகர்கள் கூறி இந்த நிகழ்வை வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories