விளையாட்டு

KL ராகுலுக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகராறா ?அவர் இதை செய்வாரா ? -இந்திய முன்னாள் வீரர் காட்டம் !

முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கே.எல்.ராகுல் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி அங்கு ரன்கள் குவித்து அணிக்கு திரும்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

KL ராகுலுக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகராறா ?அவர் இதை செய்வாரா ? -இந்திய முன்னாள் வீரர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

KL ராகுலுக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகராறா ?அவர் இதை செய்வாரா ? -இந்திய முன்னாள் வீரர் காட்டம் !

தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில், 20, ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 17,1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இவரை ரசிகர்கள் கடுமையாக விமரசித்து வருகின்றனர்.

அவருக்கு பதில் சமீப காலமாக சிறப்பாக ஆடிவரும் கில், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கே.எல்.ராகுலை தொடர்ந்து விமர்சித்துவரும் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கே.எல்.ராகுல் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி அங்கு ரன்கள் குவித்து அணிக்கு திரும்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

KL ராகுலுக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகராறா ?அவர் இதை செய்வாரா ? -இந்திய முன்னாள் வீரர் காட்டம் !

இது தொடர்பாக பேசிய அவர், "எல். ராகுலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதமா எனச் சிலர் கேட்கிறார்கள். ஆனால் அவர் நன்றாக விளையாட வேண்டும் என்றே விரும்புகிறேன். தற்போதைய நிலையில் அவரைத் தொடர்ந்து விளையாட வைப்பது அவருடைய தன்னம்பிக்கையை உயர்த்தாது. அதற்கு பதில் உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாட வேண்டும். தற்போது இங்கு ரஞ்சி கோப்பை தொடர் முடிவடைந்து விட்டதால் அவர் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

அணியிலிருந்து நீக்கப்பட்டபோது புஜாரா கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி ரன்களை குவித்து மீண்டும் அணிக்கு திரும்பினாரோ அதேபோல கே.எல்.ராகுலும் அங்கு ரன்கள் எடுத்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டியிலிருந்து ராகுல் விலகுவது சாத்தியமா?" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories