விளையாட்டு

’இவர் ஒரு scientist’ .. அஷ்வின் குறித்து இணையத்தில் வைரலாகும் சேவாக் ட்வீட்!

அஷ்வின் ஒரு விஞ்ஞானி என வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

’இவர் ஒரு scientist’ .. அஷ்வின் குறித்து இணையத்தில் வைரலாகும் சேவாக் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்கள் குவிக்க, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 258 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

’இவர் ஒரு scientist’ .. அஷ்வின் குறித்து இணையத்தில் வைரலாகும் சேவாக் ட்வீட்!
Surjeet Yadav

பின்னர் ஆடிய வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் முக்கியமான நேரத்தில் 40 ரன்கள் குவித்ததோடு இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் அன்னிங்சில் 227 ரன்னுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டாது. பின்னர் விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பிறகு இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு அவுட்டானது. இதனால் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் இந்தி அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

’இவர் ஒரு scientist’ .. அஷ்வின் குறித்து இணையத்தில் வைரலாகும் சேவாக் ட்வீட்!

ஆனால் போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே 2 ரன்னில் கே.எல். ராகுல் அவுட்டானர். பின்னர் வந்த புஜாரா, அக்சர் பட்டேல், விராட் கோலி என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்னிலேயே விக்கெட்டுகளை கொடுத்தனர்.. இதனால் இந்திய அணி தோற்று விடுமோ என்ற நிலை உருவானது.

இதையடுத்து ஆட்டத்தின் போக்கை உணர்ந்த ஸ்ரேஸ் அய்யர் நிதானமாக விளையாடினார். இவருடன் 8வது வீரராக கைகோர்த்த அஷ்வின் அதிரடியாக விளையாடினார். இந்த கூட்டணிதான் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. பிறகு 47வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அஷ்வின் 42 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து இந்திய அணியின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த அஷ்வினுக்கு ரசிகர்கள் முன்னாள் வீரர்கள் பன பலரும் பாராட்டி வருகின்றனர். இதன் காரணமாக வாழ்த்து மழையில் அஷ்வின் நனைந்து வருகிறார். இந்நிலையில் அஷ்வின் ஒரு சைன்டிஸ் என முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்து வீரேந்திர சேவாக்கின் ட்விட்டர் பதிவில், "இந்த சைன்டிஸ்ட் இந்திய அணியை வெற்றி பெற வைத்துவிட்டார். இந்த வெற்றி எப்படி கிடைத்தது. அஷ்வின் அற்புதமான இன்னிங்சை விளையாடியதால். ஷ்ரேயாஸ் உடனான அஷ்வின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது" என தெரிவித்துள்ளார். இதையடுத்து அஷ்வினை சைன்டிஸ்ட் என குறிப்பட்ட வீரேந்திர சேவாக்கின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories