விளையாட்டு

"ராயுடுவை போல சஞ்சு சாம்சனையம் ஒழிக்க BCCI முயற்சிக்கிறது " -முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு !

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனீரியா. சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்வையும் பிசிசிஐ நிர்வாகம் முடித்து விடும் என்று விமர்சித்துள்ளார்.

"ராயுடுவை போல சஞ்சு சாம்சனையம் ஒழிக்க BCCI முயற்சிக்கிறது " -முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியது. இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து அணியோடு தற்போது விளையாடி வருகிறது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது.

"ராயுடுவை போல சஞ்சு சாம்சனையம் ஒழிக்க BCCI முயற்சிக்கிறது " -முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு !

அதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் தலைமையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முழுவதுமே அணியில் இடம்பெற்றிந்த சஞ்சு சாம்சனுக்கு ஆடும் 11-ல் இடம் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெற்ற சாம்சன் அந்த போட்டியில் முக்கிய கட்டத்தில் 36 என்ற சீரான ரன்கள் குவித்தபோதிலும் அடுத்தடுத்த இரண்டு போட்டியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடந்து மோசமாக ஆடியும் அணியில் அவருக்கு இடம் தொடர்ந்து இடம்வழங்கப்படுகிறது.ஆனால் சாம்சன் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பாக ஆடியும் அவருக்கு அணியில் இடம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

"ராயுடுவை போல சஞ்சு சாம்சனையம் ஒழிக்க BCCI முயற்சிக்கிறது " -முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு !

இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனீரியா சாம்சன் கிரிக்கெட் வாழ்வையும் பிசிசிஐ நிர்வாகம் முடித்து விடும் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அம்பட்டி ராயுடு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்தார். ஆனாலும் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார் . இதே போன்ற ஒரு நிலைக்கு தான் சாம்சுனையும் பிசிசிஐ நிர்பந்திப்பது போல் தெரிகிறது.

சாம்சன் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் . அவர் கடைசியாக ஆடி உள்ள 11 போட்டிகளில் சராசரியாக 60 வைத்திருக்கிறார் . இருப்பினும் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிப்பது அவரது கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரலாம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories