விளையாட்டு

"என் தனிப்பட்ட சுதந்திரத்தை ரசிகர்கள் பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" விராட் கோலி காட்டம் !

விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நுழைந்த அவரது ரசிகர்கள் அங்கு எடுத்த விடியோவை இணையதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த சம்பவத்துக்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"என் தனிப்பட்ட சுதந்திரத்தை ரசிகர்கள் பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" விராட் கோலி காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

"என் தனிப்பட்ட சுதந்திரத்தை ரசிகர்கள் பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" விராட் கோலி காட்டம் !

இந்த கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சோபிக்க தவறினார்.

இந்த நிலையில் விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நுழைந்த அவரது ரசிகர்கள் அங்கு எடுத்த விடியோவை இணையதளத்தில் வெளியிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ரசிகர்களின் இந்த செயலுக்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள். அதை நான் எப்போதும் மதிக்கிறேன். வேறு எங்கு கிடைக்கும் அதை நான் எப்போதும் வரவேற்பேன். ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும். இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" என காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories