அரசியல்

பாஜகவுக்கு சாதகமான பல்வேறு தகவல்களை மறைத்ததா SBI ? தேர்தல் பத்திர விவகாரத்தில் தொடர்ந்து எழும் சர்ச்சை !

பாஜகவுக்கு சாதகமான பல்வேறு தகவல்களை SBI வங்கி மறைத்தது அம்பலமாகியுள்ளது.

பாஜகவுக்கு சாதகமான பல்வேறு தகவல்களை மறைத்ததா SBI ? தேர்தல் பத்திர விவகாரத்தில் தொடர்ந்து எழும் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யார் யார் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது குறித்த விவரத்தையும் SBI வெளியிட்டது. இதன் மூலம் கார்பரேட் நிறுவனங்களை மிரட்டி அதனிடமிருந்து நிதி வசூல் செய்த பாஜகவின் ஊழல் வெளிவந்தது.

பாஜகவுக்கு சாதகமான பல்வேறு தகவல்களை மறைத்ததா SBI ? தேர்தல் பத்திர விவகாரத்தில் தொடர்ந்து எழும் சர்ச்சை !

இந்த நிலையில், பாஜகவுக்கு சாதகமான பல்வேறு தகவல்களை SBI வங்கி மறைத்தது அம்பலமாகியுள்ளது. கோடக் வங்கி குழும நிறுவனமான இன்பினா கேபிடல் தனது ஆண்டு அறிக்கைகளில் மொத்தம் ரூ.131 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளதாக கூறியுள்ளது. அதாவது 2019ம் நிதியாண்டில் ரூ.30 கோடிக்கும், 2020ல் 76 கோடிக்கும், 2022ல் ரூ.25 கோடிக்கும்தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

ஆனால் SBI வெளியிட்டுள்ள விவரங்களில் அந்த நிறுவனம் ரூ.60 கோடிக்கு மட்டும் தேர்தல் பத்திரங்களை வங்கியுள்ளதாக கூறியுள்ளது. மீதமுள்ள ரூ. 71 கோடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கணக்கு விவரங்களை SBI வங்கி வெளியிடவில்லை. இன்பினா கேபிடல் நிறுவனம் வாங்கிய ரூ60 கோடி தேர்தல் பத்திரங்களையும் ஆளும் பாஜவுக்குதான் வழங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ள நிலையில், இதர தொகைகளையும் அந்த நிறுவனம் பாஜகவுக்குதான் வழங்கியுள்ளது என்பதுஉறுதியாகியுள்ளது.

ஆனால், SBI வங்கி அதனை மறைந்துள்ளது. இப்படி ஒரே நிறுவனத்தின் ரூ. 71 கோடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கணக்கு விவரங்களை SBI வங்கி மறைத்துள்ள நிலையில், இதே போன்று பல நூறு கோடிகளுக்கான கணக்குகளையும் SBI வங்கி மறைத்திருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories