அரசியல்

அரசின் புல­னாய்வு அமைப்­பு­களை வைத்து கட்சிக்கு மாமூல் திரட்டிய பாஜக : அம்பலமான உண்மைகள்... - முரசொலி !

அரசின் புல­னாய்வு அமைப்­பு­களை வைத்து கட்சிக்கு மாமூல் திரட்டிய பாஜக : அம்பலமான உண்மைகள்... - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (27.2.2024)

வேட்­டைக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் அமைப்­பு­கள்

புல­னாய்வு அமைப்­பு­களை தனது வேட்­டைக்கு பா.ஜ.க. பயன்­ப­டுத்தி வரு­வ­தாக பல ஆண்­டு­க­ளாக குற்­றச்­சாட்­டு­கள் வைக்­கப்­பட்டு வரு­கி­றது. அதற்கு மழுப்­பல் பதில்­க­ளையே பா.ஜ.க. சொல்லி வந்­தது. ஆனால் இப்­போது அம்­ப­லம் ஆகி இருக்­கும் செய்­தி­கள், அந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் நூறு விழுக்­காடு உண்மை என்­பதை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. சி.பி.ஐ., அம­லாக்­கத்­துறை சோத­னை­க­ளுக்கு உள்­ளான பல நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு 335 கோடி ரூபாய் நன்­கொடை வழங்­கி­யுள்­ள­தா­க­வும், இது­கு­றித்து உச்ச நீதி­மன்­றக் கண்­கா­ணிப்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும் என்­றும் காங்­கி­ரஸ் கட்சி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ளர் ஜெய­ராம் ரமேஷ் இந்­தக் குற்­றச்­சாட்டை பகி­ரங்­க­மாக வைத்­துள்­ளார். கடந்த 4 ஆண்­டு­க­ளில் அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ. உள்­ளிட்ட ஒன்­றிய விசா­ரணை அமைப்­பு­கள் பல்­வேறு நிறு­வ­னங்­ க­ளில் சோதனை மேற்­கொண்­ட­தா­க­வும், இந்­தச் சோத­னை­க­ளுக்­குப் பிறகு 30 நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு 335 கோடி ரூபாய் நன்­கொடை வழங்­கி­யுள்­ள­தா­க­வும் அவர் சொல்லி இருக்­கி­றார். அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ. சோத­னை­கள் மூலம் பல நிறு­வ­னங்­கள் பா.ஜ.க. அர­சால் மிரட்­டப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டிய ஜெய்­ராம் ரமேஷ், இது அப்­பட்­ட­மான மாமூல் வசூல் என தெரி­வித்­துள்­ளார். பா.ஜ.க.வுக்­குக் கிடைத்த நன்­கொடை குறித்து உச்­ச­நீ­தி­மன்ற கண்­கா­ணிப்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும் என்­றும், இது­தொ­டர்­பாக காங்­கி­ரஸ் சார்­பில் வழக்­குத் தொடர முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொல்லி இருக்­கி­றார்.

அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ. சோத­னைக்­குப் பிறகு பல நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு நன்­கொடை வழங்­கி­யது குறித்து ஒன்­றிய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளி­யி­டக் கோரி காங்­கி­ரஸ் சார்­பில் கடி­தம் எழு­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். ஒரு பக்­கம் தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் வசூல், மற்­றொரு பக்­கம் சோத­னை­கள் நடத்தி பிளாக்­மெ­யில் செய்து பா.ஜ.க. வசூல் வேட்டை நடத்­தி­யுள்­ள­தா­க­வும், அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ., வரு­மா­ன­வ­ரித்­துறை ஆகிய 3 அமைப்­பு­க­ளும் பா.ஜ.க.வால் முறை­கே­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­ தா­க­வும் ஜெய்­ராம் ரமேஷ் குற்­றம்­சாட்­டி­னார். ஒன்­றிய பா.ஜ. அரசு கடந்த 2018–ம் ஆண்டு கொண்டு வந்த தேர்­தல் பத்­தி­ரங்­கள் திட்­டம் செல்­லாது என்று உச்ச நீதி­மன்­றம் கடந்த வாரம் தீர்ப்­­பளித்­தது. அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு தொழில் நிறு­வ­னங்­கள் தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் நிதி அளித்­து­விட்டு அதற்கு கைமா­றாக பிர­தி­ப­லன் எதிர்ப்­பார்க்க வாய்ப்பு உள்­ளது என்­றும், யார் நிதி அளித்­தது என்ற விவ­ரம் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கப்­ப­டா­மல் இருப்­ப­தை­யும் 5 நீதி­ப­தி­கள் கொண்ட அர­சி­யல் சாசன அமர்வு தனது தீர்ப்­பில் சுட்­டிக் காட்­டி­யது.

அரசின் புல­னாய்வு அமைப்­பு­களை வைத்து கட்சிக்கு மாமூல் திரட்டிய பாஜக : அம்பலமான உண்மைகள்... - முரசொலி !

நிதி தந்­த­வர்­கள், அதை பெற்­றுக் கொண்ட கட்­சி­கள் பற்­றிய விவ­ரங்­களை மார்ச் 13 ஆம் தேதிக்­குள் இணை­ய­த­ளத்­தில் பதி­வேற்ற தேர்­தல் ஆணை­யத்­துக்கு உச்ச நீதி­மன்­றம் கெடு விதித்­துள்­ளது. தேர்­தல் பத்­தி­ரங்­கள் திட்­டம் மூலம் அதி­க­பட்ச நிதி­யைப் பெற்­றது பா.ஜ.க. அந்த கட்­சிக்கு மட்­டும் கடந்த 2017--–------18 முதல் 2022-–23ம் ஆண்டு வரை மொத்­தம் ரூ.6,570 கோடி நிதி தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் கிடைத்­தி­ருந்­தது. அந்த கால கட்­டத்­தில் விற்­ப­னை­யான தேர்­தல் பத்­தி­ரங்­க­ளில் 60 சத­வீ­தம் பா.ஜ.வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இவை உண்­மை­யாக வழங்­கப்­பட்ட நிதி­கள் அல்ல என்­பது அம்­ப­லம் ஆகி உள்­ளது. தொழில் நிறு­வ­னங்­கள் மீது அம­லாக்­கத்­துறை (ஈ.டி.), வரு­மான வரித்­துறை (ஐ.டி.), சி.பி.ஐ.யை ஏவி அந்த நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து பா.ஜ.வுக்கு தேர்­தல் நிதி பெறப்­பட்­ட­தாக பிர­பல ஆங்­கில செய்தி இணை­ய­த­ளங்­கள் ஆதா­ரத்­து­டன் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

2018-–19 முதல் 2022-–23 நிதி­யாண்டு வரை­யி­லான தேர்­தல் ஆணைய ஆவ­ணங்­கள், வழக்கு விவ­ரங்­கள், நிதி அறிக்­கை­களை ஆய்வு செய்து இந்த தர­வு­களை திரட்­டிய அந்த இணை­ய­த­ளங்­கள் அதனை அம்­ப­லப்­ப­டுத்தி உள்­ளன. “கடந்த 2018-–19 முதல் 2022-–23 நிதி­யாண்டு வரை பா.ஜ.வுக்கு நிதி­ய­ளித்த நிறு­வ­னங்­கள் பட்­டி­யலை பரி­சீ­லித்­த­தில் அதில் 30 நிறு­வ­னங்­கள் மீது அதே கால­கட்­டத்­தில் ஒன்­றிய அர­சின் ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. ரெய்டு நடத்­தி­யுள்­ளது. இந்த 30 நிறு­வ­னங்­க­ளும் மொத்­தம் ரூ.335 கோடியை பா.ஜ.வுக்கு தேர்­தல் நிதி­யாக தந்­துள்­ளன. இதில் 23 நிறு­வ­னங்­கள் ரெய்டு நடத்­தப்­ப­டும் வரை பா.ஜ.வுக்கு ஒரு பைசா கூட தேர்­தல் நிதி தந்­தது இல்லை. ரெய்டு நடத்­தப்­பட்­ட­தும் அந்த 23 நிறு­வ­னங்­க­ளும் பா.ஜ.வுக்கு நிதி தர ஆரம்­பித்­துள்­ளன. மொத்­தம் ரூ.187.58 கோடி நிதியை அந்த நிறு­வ­னங்­கள் பா.ஜ.வுக்கு வாரி வழங்கி உள்­ளன.

4 கம்­பெ­னி­க­ளில் ரெய்டு நடத்­தப்­பட்ட 4 மாதத்­துக்­குள் பா.ஜ.வுக்கு நிதி தந்­துள்­ளன. பா.ஜ.வுக்கு ஏற்­க­னவே குறை­வாக நிதி தந்த 6 நிறு­வ­னங்­கள் மீது ரெய்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. அடுத்த சில மாதங்­க­ளி­லேயே அந்த நிறு­வ­னங்­கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.வுக்கு கொடுத்­துள்­ளன.

தொடர்ந்து பல ஆண்­டு­க­ளாக பா.ஜ.வுக்கு நிதி தந்த நிறு­வ­னங்­கள் திடீ­ரென நிதி தரு­வதை நிறுத்­தி­விட்­டால் கூட ரெய்டு நடத்­தப்பட்­டுள்­ளது. இப்­படி 6 நிறு­வ­னங்­களை ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­டுள்­ள­னர். ரெய்டு நடந்து கொண்­டி­ருக்­கும் போதே சில நிறு­வ­னங்­கள் பா.ஜ.வுக்கு நிதி தந்­த­தும் தெரிய வந்­துள்­ளது. நன்­கொடை தந்த 3 நிறு­வ­னங்­க­ளுக்கு ஒன்­றிய அர­சி­டம் இருந்து லைசென்ஸ் உள்­ளிட்ட சலு­கை­கள் கிடைத்­துள்­ளன” - – என்று அந்த ஆங்­கில இணைய தளங்­கள் விரி­வாக எழுதி இருக்­கின்­றன.ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ.யைப் பயன்­ப­டுத்தி தொழில் நிறு­வ­னங்­க­ளில் ரெய்டு நடத்தி மிரட்டி பா.ஜ.வுக்கு தேர்­தல் நிதி குவித்த விவ­கா­ரம் என்­பது மாபெ­ரும் நிதி மோச­டி­யா­கும். இது­தான் பா.ஜ.க.வின் உண்மை ஊழல்­­முகம் ஆகும். இது­தான் பா.ஜ.க.வின் மாடல் ஆகும். ஆட்­சி­களை கவிழ்க்­க­வும் கட்­சி­களை உடைக்­க­வும் இவை­தான் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது

banner

Related Stories

Related Stories