இந்தியா

தடகள பயிற்சிக்கு சென்ற 15 வயது சிறுமி : கடத்தி, போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த 4 பேர் கும்பல் !

15 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகப் போதை மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடகள பயிற்சிக்கு சென்ற 15 வயது சிறுமி : கடத்தி, போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த 4 பேர் கும்பல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மம்தாட் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமம் ஒன்றில் 15 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் பக்கத்து நகரம் ஒன்றுக்கு தினசரி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல அந்த சிறுமி சென்றுள்ளார். தனது கிராமத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், அவரது கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் சிறுமியை வழி மறுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியை மிரட்டி அவருக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்தைக் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்ததும் அவரை அங்கிருந்து ஆள் இல்லாத இடத்துக்கு அந்த கும்பல் தூக்கி சென்றுள்ளது.

தடகள பயிற்சிக்கு சென்ற 15 வயது சிறுமி : கடத்தி, போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த 4 பேர் கும்பல் !

பின்னர் அங்கு வைத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் நினைவு திரும்பியதும் காவல்நிலையத்துக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லுவ்பிரீத் சிங், பம்மா சிங், ஜஸ்பிரீத் சிங், குர்மீத் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories