இந்தியா

”எனக்குத் தெரியவில்லை அவர்களே சண்டையிடட்டும்” : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - கங்குலி ஷாக் கருத்து!

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

”எனக்குத் தெரியவில்லை அவர்களே சண்டையிடட்டும்” : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - கங்குலி ஷாக் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

”எனக்குத் தெரியவில்லை அவர்களே சண்டையிடட்டும்” : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - கங்குலி ஷாக் கருத்து!

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாக திரும்பப்பெற்றனர்.

பின்னர் விசாரணைக் குழு அமைத்தும் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போராட்டத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

”எனக்குத் தெரியவில்லை அவர்களே சண்டையிடட்டும்” : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - கங்குலி ஷாக் கருத்து!

இதனால் இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. நேற்று போராட்டத்தின் போது வேண்டும் என்றே டெல்லி போலிஸார் அங்கிருந்த வீரர்களை அப்புறப்படுத்த முற்சித்தனர். இதில் வீரர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. போலிஸாரின் இந்த அராஜக நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்தை நாடே அறிந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து தனக்குத் தெரியாது என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சவுரவ் கங்குலி, "மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது. அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நான் செய்தித்தாள்களில் படித்தேன். அது அவர்கள் யுத்தம் என்பதால், அவர்களே சண்டையிடட்டும்.

விளையாட்டு உலகில் முழுமையாகத் தெரியாத விஷயத்தை பற்றிப் பேசக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன். மல்யுத்த வீரர்கள் நாட்டுக்காக ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர். எனவே அவர்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சவுரவ் கங்குலி பேசிய வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து அவருக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories