இந்தியா

செல்போன் திருட்டு?.. ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. அதிர்ச்சி Video!

உத்தர பிரதேசத்தில், செல்போன் திருடியதாகக் கூறி ஓடும் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் திருட்டு?.. ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. அதிர்ச்சி Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி வரை அயோத்தி கான்ட் ஓல்டு டெல்லி விரைவு ரயில் சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் செல்போனை திருடியதாக கூறி அவரை சக பயணிகள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அந்த வாலிபரை ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசியுள்ளனர். இதில் அந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி போலிஸார் விசாரணை செய்ததில் இந்த சம்பவம் கடந்த வெள்ளியன்று இரவு நடந்தது என தெரியவந்துள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள தில்ஹர் ரயில் நிலையத்தின் அருக அந்த வாலிபரின் உடலை போலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் அந்த வாலிபர் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. அவர் யார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் திருடப்பட்டதாக கூறப்படும் செல்போன் மீட்கப்பட்டுள்ளது.

செல்போன் திருட்டு?.. ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. அதிர்ச்சி Video!

இதனைத் தொடர்ந்து வாலிபரை கொடூரமாகத் தாக்கும் வீடியோவில் இருந்து நரேந்திர துபே என்ற நபரை அடையாலம் கண்ட போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த இளைஞர் உண்மையிலேயே செல்போனை திருடினாரா? அல்லது வேறு காரணங்களுக்காக அவர் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டாரா? என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories