இந்தியா

பிணவறையில் பெண்களின் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு !

பிணவறைக்கு வரும் பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்துவந்த பிணவறை ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிணவறையில் பெண்களின் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டதத்தில் உள்ள கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் சையத் (வயது 30). இவர் கடந்த 2021 ம் ஆண்டு மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த பிணவறை ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார்.

இவர் கடந்த மாதம் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது இவரை பிடித்த அந்த பகுதி பொதுமக்கள் இவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் அவரின் செல்போன் உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

பிணவறையில் பெண்களின் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு !

இந்த நிலையில், அவர் ஜாமின் பெற்றுவெளியே வந்த நிலையில், அவரின் செல்போனை போலிஸார் ஆய்வு செய்துள்ளனர். அதில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்துள்ளது. இவரின் செல்போனில் பிணவறைக்கு வரும் பெண்ணின் சடலங்களின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது.

அதுதவிர பிணவறையில் சில பெண்களோடு அவர் இருக்கும் வீடியோக்களும் அதில் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து சையத் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணையில், விபத்து மற்றும் தற்கொலை செய்துகொண்டு இறந்து பிணவறைக்கு வரும் பெண்களின் உடலை நிர்வாண புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.

பிணவறையில் பெண்களின் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு !

விசாரணையில் சையத்துக்கு கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சையத்தை தேடிவருவதோடு பிணவறை ஊழியர்கள் மற்றும் சையத்துடன் பழகி வந்த நர்சு, பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories