இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பாட்டி.. உறவினர்களால் நேர்ந்த கொடூரம் : ம.பி-யில் அதிர்ச்சி!

16 வயது சிறுமியையும், அவரது பாட்டியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ள நபர்களின் செயல் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பாட்டி.. உறவினர்களால் நேர்ந்த கொடூரம் : ம.பி-யில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது மாமா வீட்டிற்கு தங்க சென்றுள்ளார். இவர் சென்ற ஒரு வாரத்திலேயே, சிறுமியை சிலர் தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது இதனை தடுக்க சென்ற பாட்டியையும் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து சில மணி நேரங்களில் அந்த வழியாக வந்த சிலர், காயங்களுடன் மயக்கத்தில் இருந்த சிறுமியையும், பாட்டியையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பாட்டி.. உறவினர்களால் நேர்ந்த கொடூரம் : ம.பி-யில் அதிர்ச்சி!

இந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சிறுமி மற்றும் பாட்டிக்கு நடைபெற்ற உடற்கூராய்வில் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை, தனது தாய், மற்றும் மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது அவர்களது உறவினர்களில் ஒருவர் என்று தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை தேடி சென்ற காவல்துறையினர் அதில் ஒருவரை கைது செய்தனர். மற்றவர் தலைமறைவானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பாட்டி.. உறவினர்களால் நேர்ந்த கொடூரம் : ம.பி-யில் அதிர்ச்சி!

விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், தடுக்க வந்த பாட்டியையும் வல்லுறுவுக்குக் ஆளாக்கி கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories