இந்தியா

‘ஸ்டாலின் அண்ணா.. கூட்டாக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ : வடக்கில் இருந்து வந்த நம்பிக்கை குரல் !

“நன்றி அண்ணா.. இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.” என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

‘ஸ்டாலின் அண்ணா.. கூட்டாக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ : வடக்கில் இருந்து வந்த நம்பிக்கை குரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பீகார் பா.ஜ.க கூட்டணி ஆட்சி முற்றிலும் முறிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டும் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி மீண்டும் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.கவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் 43 மற்றும் மற்றக் கூட்டணி கட்சிகள் 8 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கப்பட்டது.

எதிரணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர்.

‘ஸ்டாலின் அண்ணா.. கூட்டாக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ : வடக்கில் இருந்து வந்த நம்பிக்கை குரல் !

இந்நிலையில் அதிக இடங்களை கைபற்றிய பா.ஜ.க முதலமைச்சர் பதவி வேண்டும் என அழுத்தம் கொடுத்தது. ஆனால் நிதிஷ்குமார் அனுமதிக்காததால் அவரையே முதல்வராக்க பா.ஜ.க ஒப்புக்கொண்டது. மேலும் துணை முதலமைச்சர் பதவி பா.ஜ.கவுக்கு கிடைத்தது.

இந்த பிரச்சனையில் இருந்து இரு கட்சிகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவந்தது. மேலும் நிதிஷ்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில், இந்த கூட்டணி விவகாரம் தற்போது பட்டவர்த்தமாக வெளிப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோனைக் கூட்டத்தில், பா.ஜ.க ஜே.டி.யூ ஆட்சியை முறித்துக்கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கவுள்ளதாக அறிவித்தார்.

‘ஸ்டாலின் அண்ணா.. கூட்டாக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ : வடக்கில் இருந்து வந்த நம்பிக்கை குரல் !

அதன்படி நேற்று ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் தலைமையில், பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

பா.ஜ.க கூட்டணி அமைக்கும் இடங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜ.க ஆட்சியை அமைப்பதே அவர்களையே வேலையாக இருந்த நிலையில், பா.ஜ.கவின் வியகத்தை முறியடித்து நிதிஷ்குமார் எடுத்த முயற்சிக்கு நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

‘ஸ்டாலின் அண்ணா.. கூட்டாக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ : வடக்கில் இருந்து வந்த நம்பிக்கை குரல் !

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பீகாரில் புதிதாக கூட்டணி அரசு அமைந்து இருப்பது நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. பீகாரில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கும், துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேஜஸ்விக்கும் வாழ்த்து!” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பீகார் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நன்றி அண்ணா.. இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அவர்களுக்கு இன்று முதல் பின்னடைவு தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories