இந்தியா

நடிகை சன்னி லியோனின் pan எண்ணைப் பயன்படுத்தி கடன் பெற்ற மர்ம நபர்.. மோசடியில் சிக்கிய பின்னணி என்ன?

நடிகை சன்னி லியோனின் பான் எண்ணைப் பயன்படுத்தி கடன் மோசடி சம்பவம் நடந்துள்ளதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகை சன்னி லியோனின் pan எண்ணைப் பயன்படுத்தி கடன் பெற்ற மர்ம நபர்.. மோசடியில் சிக்கிய பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் ஆன்லைன் மோசடி அதிகரித்துள்ளது. இது குறித்து போலிஸார் எச்சரிக்கை செய்து வந்தாலும் இதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. மேலும் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் அவரை இந்த ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகை சன்னி லியோனும் இந்த மோசடியில் சிக்கியுள்ளார். இவரின் பான் அட்டையை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ரூ.2000 கடன் வாங்கியுள்ளார். இது தெரிந்து அதிர்ச்சியடைந்த சன்னி லியோன் இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "சில முட்டாள்கள் எனது பான் எண்ணை பயன்படுத்தி ரூ.2000 கடன் பெற்றுள்ளார்கள். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து இவரின் பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்துச் சம்மந்தப்பட்ட வங்கி பிரச்சனையைச் சரி செய்துவிட்டதாக மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் தெரிவித்து முதலில் பதிவிட்ட ட்விட்டரையும் சன்னி லியோன் நீக்கியுள்ளார். அதேபோல், நடிகை சன்னி லியோனின் ட்விட்டரை பார்த்து விட்டு ஆதித்யா கல்ரா என்ற நபரும் இதேபோன்ற சிக்கலை நானும் எதிர்கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories