இந்தியா

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்”: 5-ம் கட்ட அறிவிப்பிலும் வேட்டு வைத்த மோடி அரசு!

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்” என 5-ம் கட்ட அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்”: 5-ம் கட்ட அறிவிப்பிலும் வேட்டு வைத்த மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார்.

அதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டு வருகிறார்.

கடந்த 4 நாட்களில் சிறு குறு தொழில் துறையினர், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், மீனவர்களுக்கான திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன், நேற்றைய தினம், நிலக்கரி, சுரங்கம், இராணுவ உற்பத்தி, விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின்சார விநியோகம், ஆகாயம், அணு ஆற்றல், விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் தொடர்பான அறிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் சுயசார்பு திட்டத்க்தின் 5ம் கட்ட அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி, நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம், சட்டம் தொடர்பான அறிப்பை வெளியிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்”: 5-ம் கட்ட அறிவிப்பிலும் வேட்டு வைத்த மோடி அரசு!

தொடர்ந்து பேசிய அவர், பொருளாதார துறையில் இந்தியா மிக சிக்கலான ஒருக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் முதல் அதாவது, மே 16ஆம் தேதி வரை 8.19 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ.2,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதேப்போல், 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கியில் 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2.2 கோடி தொழிலாளர்களுக்கு 3,950 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, நேரடியாக தலா 2000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் கட்டணத்தில் 85 சதவீத தொகையை மத்திய அரசும், 15 சதவீத தொகையை மாநில அரசும் வழங்கியது.

நாட்டில், 12 லட்சம் தொழிலாளர்கள் தங்களது EPF தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெற்றுள்ளனர்.

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்”: 5-ம் கட்ட அறிவிப்பிலும் வேட்டு வைத்த மோடி அரசு!

2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு 3,950 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதியிலிருந்து 3600 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் 6.81 கோடி மானியமில்லாத சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

நெருக்கடியான சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பலன் கிடைத்துள்ளது.

பரிசோதனை மையங்கள் அமைக்க 550 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் சுமார் 11.08 கோடிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

PPE எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் 51 லட்சமும், N-95 மாஸ்க்குகள் 87 லட்சமும் விநியோகிக்கப்பட்டு உள்ளன.

சுகாதார நடவடிக்கைகளுக்கு இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேப்போல், மாநிலங்களுக்கு இதுவரை 4,113 கோடி ரூபாய் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்”: 5-ம் கட்ட அறிவிப்பிலும் வேட்டு வைத்த மோடி அரசு!

வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பெனி சட்டத்தில் உள்ள சில கிரிமினல் குற்றப்பிரிவுகளை தளர்த்த நடவடிக்கை.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் தளர்வு உருவாக்கப்படும். திவால் சட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் நடத்துவோருக்கு தனி தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

ஆன்லையன் மூலம் பள்ளிக்கல்வியை மேம்படுத்த புதிதாக 12 கல்வி சேனல்கள் தொடங்கப்படும். 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனியே சேனல் தொடங்கப்படும்

மே 30ம் தேதி முதல் ஆன்லைனில் பாடம் நடத்த 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

2025க்குள் அனைத்து குழந்தைகளும், 5ம் வகுப்பு படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும்.

டிஜிட்டல் முறையில் கல்வி கற்க இ-வித்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டும்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வாய்ப்பு மற்றும் செவி மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்காக சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

“அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்”: 5-ம் கட்ட அறிவிப்பிலும் வேட்டு வைத்த மோடி அரசு!

குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும். கட்டுப்பாடுகள் இன்றி அனைத்து துறைகளிலும் தனியாருக்கு அனுமதிக்கப்படும்

ஒரே துறையில் 4க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் அவை ஒன்றிணைக்கப்படும்.

பொது முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் எவை? தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும்.

தனியார் முதலீடு தொடர்பான விரிவான கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். பாதுகாப்பு போன்ற தேவைப்படும் துறைகளில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதி அமைச்சரின் அறிவிப்புகள் இந்தியாவையே தனியாருக்கு பங்கிட்டு விற்பதைப் போல இருப்பதாக பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

banner

Related Stories

Related Stories