சினிமா

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்.. மின்சாரம் தாக்கியதில் 2 ரசிகர்கள் துடிதுடித்து பலி.. ஆந்திராவில் சோகம் !

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கட் அவுட் வைத்துக்கொண்டிருந்த ஆந்திர ரசிகர்கள் 2 பேர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்.. மின்சாரம் தாக்கியதில் 2 ரசிகர்கள் துடிதுடித்து பலி.. ஆந்திராவில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்புக்கு சிலர் ரசிகர்களாக இருந்தாலும், இவரது செயலுக்கு பல பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். 'அகரம் அறக்கட்டளை' என்ற பெயர் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறார்.

மேலும் அவ்வப்போது சமூக சேவையும் செய்து வருகிறார். இவரது செயலுக்கு பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் ரசிகர்கள் பெரும் அளவில் கொண்டாடி வருவர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக என பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் சார்பில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்.. மின்சாரம் தாக்கியதில் 2 ரசிகர்கள் துடிதுடித்து பலி.. ஆந்திராவில் சோகம் !

அந்த வகையில் இன்று சூர்யா தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை பகுதியில் உள்ள யாக்களவாரி பாளையம் கிராமத்தில் அவரது ரசிகர்கள் பெரிய கட் அவுட்கள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்.. மின்சாரம் தாக்கியதில் 2 ரசிகர்கள் துடிதுடித்து பலி.. ஆந்திராவில் சோகம் !

அதன்படி இளைஞர்கள் சிலர் கட் அவுட்டுகளை வைத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து வெங்கடேஷ் (19), சாய் (20) ஆகிய 2 இளம் ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories