Sports
"பலமான எங்கள் பந்துவீச்சை இந்திய அணியால் சமாளிக்க முடியுமா ? " - பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் சவால் !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி சவாலாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய தேர்வு தலைவர் அகர்கர் பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரை சமாளிக்க இந்திய அணியின் விராட் கோலி போதும் என்று கூறியதாக தவறான செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்த தகவலுக்கு பாகிஸ்தான் அணி வீரர் ஷதாப் கான் பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியில் இருந்தோ, அல்லது பாகிஸ்தான் அணியில் இருந்தோ என்ன வேண்டுமானாலும் கருத்துகள் சொல்லப்படலாம். ஆனால் போட்டி நாடாகும் நாளில்தான் உண்மை என்னவென்பது தெரியவரும். எங்கள் பந்துவீச்சு மிகவும் பலமானது. இதனால் இந்திய அணிக்கு எங்களால் சவால் அளிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!