India
“ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாண பூஜைக்கு அனுப்பிய கணவன்” : மகாராஷ்டிராவில் 'பகீர்' சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண் குழந்தை வேண்டி சாமியாரிடம் நிர்வாண பூஜைக்கு அனுப்பியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் பெண்ணின் புகாரில், "கடந்த நான்கு வருடங்களாக ஆண் குழந்தை இல்லாததால் எனது மாமியார் மற்றும் மாமனார் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.
மேலும் ஆண் குழந்தை வேண்டி ஒரு சாமியாரிடம் கணவரும், மாமியாரும் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த சாமியார் சாம்பலைக் கொடுத்துச் சாப்பிட வைத்தார். பிறகு உடல் முழுவதும் சாம்பல் பூசி பூசை நடத்தவேண்டும் என்று கூறினார். இப்படிச் செய்தால் குழந்தை பிறக்கும் என்றும் அவர் கூறினார்.
அங்கிருந்து வீட்டிற்கு வந்த உடனே என்னைக் கணவரும், அவரது மாமியாரும் நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் சாம்பல் பூசி கொடுமைப்படுத்தினர். மேலும் ஆண் குழந்தை இல்லாததால் வேறு ஒரு பெண்ணையும் என கணவர் ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர், மாமியார், சம்பந்தப்பட்ட சாமியார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!