India
“ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாண பூஜைக்கு அனுப்பிய கணவன்” : மகாராஷ்டிராவில் 'பகீர்' சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண் குழந்தை வேண்டி சாமியாரிடம் நிர்வாண பூஜைக்கு அனுப்பியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் பெண்ணின் புகாரில், "கடந்த நான்கு வருடங்களாக ஆண் குழந்தை இல்லாததால் எனது மாமியார் மற்றும் மாமனார் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.
மேலும் ஆண் குழந்தை வேண்டி ஒரு சாமியாரிடம் கணவரும், மாமியாரும் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த சாமியார் சாம்பலைக் கொடுத்துச் சாப்பிட வைத்தார். பிறகு உடல் முழுவதும் சாம்பல் பூசி பூசை நடத்தவேண்டும் என்று கூறினார். இப்படிச் செய்தால் குழந்தை பிறக்கும் என்றும் அவர் கூறினார்.
அங்கிருந்து வீட்டிற்கு வந்த உடனே என்னைக் கணவரும், அவரது மாமியாரும் நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் சாம்பல் பூசி கொடுமைப்படுத்தினர். மேலும் ஆண் குழந்தை இல்லாததால் வேறு ஒரு பெண்ணையும் என கணவர் ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர், மாமியார், சம்பந்தப்பட்ட சாமியார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”3 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகள்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
200-க்கு 212 : குஜராத் பள்ளியில் மாணவி பெற்ற மதிப்பெண்ணால் ஷாக் - கேள்விக்குறியாகும் கல்வியின் தரம்!
-
3 Yrs of DMK Govt: 3 ஆண்டுகளில் உலகப் புகழ் பாடும் சாதனைகள் - சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு வாழ்த்து!
-
NEET 2024 தேர்வு மோசடி விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?