India
புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. சலனமில்லாமல் வரி விதித்து மக்களை அவதியடையச் செய்யும் மோடி அரசு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
அதன்படி, சென்னையில் நேற்று டீசல் 80.65 ரூபாய் இருந்த நிலையில் 24 காசுகள் உயர்ந்து இன்று 80.89 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல, பெட்ரோல் லிட்டருக்கு 87.83 ரூபாய் என இருந்த நிலையில், 22காசுகள் காசு உயர்ந்து 88.05 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை உயர்வு புதிய உச்சத்தை எட்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மோடி அரசோ எந்தவொரு சலனமும் இல்லாமல் எரிபொருட்கள் மீதான வரியை விதித்துக்கொண்டே வருகிறது.
Also Read
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!