உலகம்

"தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலுடன் உடன்படிக்கைக்குத் தயார்" - ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு !

இஸ்ரேலுடன் முழுமையான உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

"தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலுடன் உடன்படிக்கைக்குத் தயார்" - ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

"தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலுடன் உடன்படிக்கைக்குத் தயார்" - ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு !

காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் தற்போது தெற்கு காசாவில் இருக்கும் ரஃபா நகரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஃபாவில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்தது.

இந்த நிலையில், இஸ்ரேலுடன் முழுமையான உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், " இஸ்ரேல் ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டுள்ளது. மற்றொரு பக்கம் எங்கள் மக்கள் மீது இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் இந்த கொள்கையை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய அமைப்புகள் ஏற்க மாட்டோம். எனினும் காசாவில் உள்ள எங்கள் மக்களுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் இஸ்ரேல் நிறுத்தினால் முழுமையான உடன்பாட்டை எட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். பணய கைதிகளை விடுவிப்பது தொடங்கி விரிவான ஒப்பந்தத்திற்கு நாங்கள் தாயாக உள்ளோம். எங்களது இந்த நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories