உலகம்

"ஆட்சியமைக்கப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளோம்" - இம்ரான் கான் கட்சி அறிவிப்பு !

ஆட்சியமைக்க விரும்பவில்லை என்றும், எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாகவும் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.

"ஆட்சியமைக்கப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளோம்" - இம்ரான் கான் கட்சி அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2922-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரின் கட்சியும் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

"ஆட்சியமைக்கப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளோம்" - இம்ரான் கான் கட்சி அறிவிப்பு !

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்கு கடந்த 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் பதிவான வாக்குகள் அடுத்த நாளே எண்ணப்பட்ட நிலையில், தற்போதுவரை முழு முடிவுகளும் வெளிவரவில்லை. அங்குள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 266 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் நேரிடையாக மக்களால் தேர்வு செய்யப்படுவர்.

இதில் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களுக்கு 102 தொகுதிகள் கிடைத்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 தொகுதிகளும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தாங்கள் ஆட்சியமைக்க விரும்பவில்லை என்றும், எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாகவும் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.

"ஆட்சியமைக்கப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளோம்" - இம்ரான் கான் கட்சி அறிவிப்பு !

இந்த தகவலை தெஹ்ரீக்-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் கூறியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்ம், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே அக்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த ஆட்சியமைக்க முடியாது.

இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவுசெய்துள்ளோம். எங்கள் உறுப்பினர்கள் தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள். இந்த தேர்தல் மூலம் மக்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு என்பதை பாகிஸ்தான் மக்கள் நிரூபித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories