உலகம்

உக்ரைனில் போரை நீடிக்கும் நேட்டோவின் போர் வெறிக்கு தக்க பதிலடி கொடுப்போம் -ரஷ்யா அறிவிப்பு !

நவீன மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான புதிய தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ள நேட்டோ நாடுகளுக்கு பதிலடி அளிக்கப்படும் என ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைனில் போரை நீடிக்கும் நேட்டோவின் போர் வெறிக்கு தக்க பதிலடி கொடுப்போம் -ரஷ்யா அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.

இதுதவிர அமெரிக்கா, உள்ளிட்ட நேட்டோவின் அதிநவீன ஆயுதங்களும் உக்ரைனுக்கு கிடைத்த நிலையில், இதனைத் கொண்டு இனி தற்காப்பு உத்தியை கைவிட்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அறிவித்த நிலையில், கடந்த வாரம் அந்த தாக்குதல் நடைபெற்றது.இந்த தாக்குதலின்போது அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகள் அதிக பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அந்த பீரங்கிகள் எதிர்க்கவே முடியாதது என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதலில் ரஷ்யா தோல்வியைத் தழுவும் என மேற்கத்திய ஊடகங்கள் கூறின.

ஆனால், இந்த தாக்குதலில் 8 லெப்பா்ட்-2 பீரங்கிகளை ரஷ்யா தாக்கி அளித்ததாக அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனின் தாக்குதல் தொடங்கிய சில நேரத்திலேயே அது முடிவுக்கு வந்துள்ளது, இதில் ஏராளமான உக்ரைன் வீரர்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், அதற்காக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் இந்த தோல்வி மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் போரை நீடிக்கும் நேட்டோவின் போர் வெறிக்கு தக்க பதிலடி கொடுப்போம் -ரஷ்யா அறிவிப்பு !

இதனிடையே நேட்டோ நாடுகளில் உச்சி மாநாடு சில நாட்களுக்கு முன்னர் லிதுவேனியாவில் நடைபெற்றது. இதில் ஸ்வீடனை நேட்டோவில் இணைப்பது குறித்தும், உக்ரைன்- ரஷ்யா போர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இதில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எப்போது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்படும் என்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் உக்ரைனுக்கு நெருந்தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை கொடுப்பது எனவும் முடிவு செய்துள்ளது

இந்த நிலையில், நவீன மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான புதிய தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ள நேட்டோ நாடுகளுக்கு பதிலடி அளிக்கப்படும் என ரஷ்யா கூறியுள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேட்டோ உச்சி மாநாட்டின் , அச்சுறுத்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சரியான நேரத்தில் பதிலளிப்போம். நேட்டோ தங்களின் படைகளைப் பயன்படுத்துவதற்கான வரம்பைத் தொடர்ந்து குறைத்து வருவதோடு, அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களை அதிகப்படுத்துகிறது.

ரஷ்யா, உக்ரைனுக்கிடையிலான மோதலை முடிந்தவரை நீட்டிப்பதற்காக, நவீன மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான புதிய தீர்மானங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். எனவே நாங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவுகளை விடவும் அதிகமாக, ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்பை தொடர்ந்து பலப்படுத்துவோம்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories