உலகம்

நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. தூதரகத்தை மூடி, தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா.. தொடரும் பதற்றம் !

பின்லாந்து நேட்டோவில் இணைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு தூதரகத்தை மூடுவதாகவும், ஒன்பது பின்லாந்து தூதர்களை வெளியேற்றுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. தூதரகத்தை மூடி, தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா.. தொடரும் பதற்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயல்வதைக் கண்டித்து ரஷ்யா உக்ரைன் மேல் தொடுத்துள்ள போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. தூதரகத்தை மூடி, தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா.. தொடரும் பதற்றம் !

இதனிடையே இதுவரை நேட்டோ அமைப்பில் சேராமல் நடுநிலை வகித்து வந்த பின்லாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளது. இதன்மூலம் நேட்டோவில் இணையும் 31ஆவது நாடாக பின்லாந்து மாறியுள்ளது. ரஷ்யா -உக்ரைன் போருக்குப் பின் நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 80% பின்லாந்து மக்கள் நேட்டோவில் இணைய வேண்டும் என கருத்து தெரிவித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

பின்லாந்து நாட்டின் இந்த முடிவை ரஷ்யா மிகக் கடுமையான எதிர்த்த நிலையில், இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்துள்ளது. அதன்படி, இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பின்லாந்தின் தூதரகத்தை மூடுவதாகவும், ஒன்பது பின்லாந்து தூதர்களை வெளியேற்றுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், "நேட்டோவுடன் பின்லாந்து இணைந்ததால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கம் போரை நடத்த பின்லாந்து ஊக்குவிக்கிறது. இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்கு எதிரான தெளிவான விவகாரம் ஆகும். பின்லாந்து அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் பதிலளிக்கப்படாமல் இருக்க முடியாது " என்று கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories