உலகம்

இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தான் ஆளும் கட்சி.. இணையவாசிகள் கொதிப்பு !

இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கிண்டல் செய்யும் விதத்தில் பாகிஸ்தான் ஆளும் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தான் ஆளும் கட்சி.. இணையவாசிகள் கொதிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை சார்பில் பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை விரட்டும்போது இந்தியாவின் மிக் 21 ரக விமானத்தை இயக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானத்தை பாகிஸ்தான் நாட்டு இராணுவம் தாக்கியதில் தப்பிப்பதற்காக பாராசூட் மூலம் கீழே குதித்த அவர், அந்நாட்டு எல்லையில் விழுந்தார்.

இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தான் ஆளும் கட்சி.. இணையவாசிகள் கொதிப்பு !

அதன் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை சிறை பிடித்து வைத்திருந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்திய தூதரகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு மார்ச் 1ம் தேதி வாகா - அட்டாரி எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், விங் கமாண்டர் அபிநந்தனை கிண்டல் செய்யும் விதத்தில், அபிநந்தனுக்கு வழங்கப்பட்ட ஒரு கோப்பை டீயின் விலை எம்ஐஜி-21 என எழுதப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்தியா தரப்பிலும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் ந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்து சிறைபிடித்திருப்பது போன்ற உருவபொம்மை ஒன்று அந்நாட்டு விமானப்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories