
2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளன.
இதில், திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அறிவித்துள்ளது.
அதில், ”மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் திருநர் - திருநங்கையர் நலவாழ்வுக் குழு (TWC - Transgender Welfare Committee) அமைக்கப்படும்.
மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவர்.
இளம் திருநர், திருநங்கையர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், ஆதரவுக் கரம் நீட்டிடவும் Helpline உருவாக்கப்படும்.” என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த அரசியல் கட்சிகளும் அவர்களை கண்டுகொள்ளதாதபோது, திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தி.மு.க கொடுத்துள்ள வாக்குறுதி கவனம் பெற்றுள்ளது. மேலும் திருநர் - திருநங்கையர் அனைவரும் இந்த வாக்குறுதியை வரவேற்றுள்ளனர்.






