
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது. குஜராத் மாடல் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டிற்கு வந்து, திராவிட மாடல் அரசின் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறார்கள்.
கல்வியில் மட்டுமல்லாது மருத்துவத்திலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக விளங்கி வருகிறது.கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில், நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம், மருத்துவச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.
கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழ்நாடு, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையில், 425 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில், இயக்கப்படும் நடமாடும் மருத்துவ சேவையில், தமிழ்நாடு 31 சதவீதத்தைக் கொண்டு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களான குஜராத்தில், 74 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை வாகனங்களும், சத்தீஸ்கரில் 30 வாகனங்களும், அரியானாவில் 58 வாகனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடமாடும் மருத்துவ சேவையில், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிசோதனை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகிறது. தடுப்பூசி போடுதல், சர்க்கரை நோய் , உயர் இரத்த அழுத்தம் மற்றும் காசநோய் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ப்படுகிறது.






