தமிழ்நாடு

கோவையில் “ஜவுளி தொழில் மாநாடு 360!” : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?

கோவையில் வரும் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய இருநாட்கள் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் முதலாவது ‘ஜவுளி தொழில் மாநாடு 360’ நடைபெறவுள்ளது.

கோவையில் “ஜவுளி தொழில் மாநாடு 360!” : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பினைச் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஜவுளித் துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசின்  துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு  ஆகியோர் இணைந்து நடத்தும் முதலாவது ‘ஜவுளி தொழில் மாநாடு 360’ கோயம்புத்தூர் மாநகரின் கொடிசியா வளாகத்தில் 29.01.2026 முதல் 30.01.2026 வரையிலான இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.01.2026 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெறும்  இம்மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேகமாக கண்காட்சி (Exhibition), அழகு நயப்பு காட்சி (Fashion Show), வாங்குவோர் – விற்போர் சந்திப்பு (Buyer-Seller Meet), ஐந்து கருத்தரங்குகள் (Panel Discussion) மற்றும் தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதியில் அமைய உள்ள PM-MITRA ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான Roadshow ஆகியவை நடைபெறவுள்ளன.

கோவையில் “ஜவுளி தொழில் மாநாடு 360!” : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?

மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.  மேலும், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் 2025-26,  துணிநூல் துறை மற்றும் கைத்தறி துறை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்டு வரும்  நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியங்கள் ஆகியற்றை வழங்கவுள்ளார். 

banner

Related Stories

Related Stories