தமிழ்நாடு

செய்தியாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட சீமான் : பொதுக்கூட்டத்தில் நடந்த பரபரப்பு!

செய்தியாளர்களிடம் சீமான் ஆவேசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட சீமான் : பொதுக்கூட்டத்தில் நடந்த பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். இதற்கிடையில், இந்நிகழ்ச்சியை செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் வந்துள்ளனர். அப்போது அங்குருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் 'எங்களை அனுமதிக்க வேண்டும்' என செய்தியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக இருந்தனர். இதனால் செய்தியாளர்களுக்கும், அங்கு இருந்த பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது மேடையில் பேசிக் கொண்டு இருந்த சீமான் திடீரென ஆவேசமாக கீழே இறங்கி வந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்ய முயற்சித்தார். இதனால் இந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக கட்சி அளித்தது.

பின்னர் அங்கிருந்து சீமானை கட்சி தொண்டர்கள் அழைத்து சென்றனர். பொதுக்கூட்ட மேடையில் ஆவேசத்துடன் செய்தியாளர்களை தாக்குவது போல் வந்த சீமானின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories