தமிழ்நாடு

40 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கலாம்... மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கிய சென்னை மாநகராட்சி !

வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்து பணிகளை துவங்கி உள்ளது

40 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கலாம்... மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கிய சென்னை மாநகராட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை பெருநகரில் பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்து பணிகளை துவங்கி உள்ளது....

முதற்கட்டமாக கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள இந்திரா காலனி மைதானம், மாதிரி பள்ளி மைதானம், ஆர்.ஏ.புரம் செயின்ட் மேரிஸ் விளையாட்டு மைதானம், தி.நகர் ஸ்ரீ வெங்கட்நாராயணா மைதானம், டிரஸ்ட்புரம் மைதானம், கிரசண்ட் பள்ளி மைதானம், மேயர் ராமநாதன் சாலை ஆகிய ஏழு விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிதியுதவியின் கீழ், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டு திடல்களிலும் தலா, 1.6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது ..ஒவ்வொரு கட்டமைப்பும், 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழைநீர், இக்கட்டமைப்பு பகுதியில் வந்து சேரும் வகையில், வடிவமைக்கப்படுகிறது.

40 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கலாம்... மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கிய சென்னை மாநகராட்சி !

அதைப்போல 15 மண்டலங்களில் உள்ள 770 பூங்காக்களில், 3,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், நிலத்தடி மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் 250 பூங்காக்களில் இப்பணிகள் முடிந்துள்ளது.பூங்கா, விளையாட்டு மைதானத்தில், பல இடங்களில் அமைக்கப்படும், 'கேட்ச் பிட்' எனும் மழைநீர் உள்வாங்கியில் வடியும் தண்ணீர், குழாய் வாயிலாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு எடுத்து செல்லப்படும்.

இதன் வாயிலாக, விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளில் நீர் உள்வாங்காமல், மழைநீர் வடிகால்களில் கொள்ளளவை மீறி செல்லும்போது, இதுபோன்ற விளையாட்டு திடல்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு திருப்பி விடப்படும். இதன்மூலம் குடியிருப்புகளில் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். இந்த கட்டமைப்பு, 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீரை சேகரித்து வைக்கும். இவற்றால் நீலத்தடி நீர் உயர்வதுடன், அருகாமை குடியிருப்புகளில் கோடை காலங்களிலும் நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

banner

Related Stories

Related Stories