தமிழ்நாடு

4 மணி நேரம் : உடன்பிறப்புகளிடம் வாழ்த்து பெற்றுவரும் திராவிட நாயகர்!

4 மணி நேரத்திற்கு மேலாக உடன்பிறப்புகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்று வருகிறார்.

4 மணி நேரம் : உடன்பிறப்புகளிடம் வாழ்த்து பெற்றுவரும் திராவிட நாயகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது இந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அண்ணா அறிவாலயம் வருகை தந்து கழக தொண்டர்களின் வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார். நீண்ட வரிசையில் நின்று கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சருக்கு புத்தகம், பழங்கள், இனிப்புகள்,வெள்ளி வாள் உள்ளிட்டவற்றை நினைவு பரிசாக கழக தொண்டர்கள் வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலையை சேர்ந்த கழக தொண்டர்கள் 250 கிலோ எடைக்கொண்ட பித்தளையில் ஆனா சிங்கம் சிலை முதலமைச்சருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினர். கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளின் வாழ்த்துக்களை 4 மணி நேரத்திற்குமேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுவருகிறார்.

banner

Related Stories

Related Stories