தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாளை பிறந்தநாள். இந்த பிறந்தநாளை முன்னிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகள் வைத்து வீடியோ ஒனறை வெளியிட்டுள்ளார்.
அதில், பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவது இல்லை. ஆனால், கழக உடன்பிறப்புகள்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கழக அரசின் சாதனைகள் – கழக கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள். இந்த முறை,எனது பிறந்தநாள் வேண்டுகோளாக, என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்குறேன்.
இன்னைக்கு தமிழ்நாடு தன்னுடையை உயிர்ப் பிரச்சினையான மொழிப்போரையும்-தன்னுடையை உரிமைப் பிரச்சினையான- தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டிருக்கிறது.இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, அரசின் சமூக நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் என்பதை உடன்பிறப்புகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இன்று கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது. இதனைப் பார்த்த ஒன்றிய அரசு இந்தியை திணிக்க வில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது.
மும்மொழி கொள்கையை ஏற்காததால் நமக்கு வழங்க வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார்கள். அதேபோல், “தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம்”- என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிற, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவதில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கக்கூடாது; நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள் என்று நாம் கேட்கிறோம்.ஒருவேளை அதுநடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்காது என்று அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும்- எதற்காகவும் விட்டுதர மாட்டோம்!தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என தெரிவித்துள்ளார்.